Wednesday, December 9, 2009

கடைக்கண் பார்வையில்


கடைக்கண் பார்வையில்
களவுபோயிற்று என்னிதயம்
களவுபோன இதயத்தின்
கதை சொல்ல வந்தவனை
இமைமுடிச்சிறைக்குள்
இரக்கமின்றி அடைத்தாய்
வதைபடும் நான் உன்
வருகைக்காக காத்திருக்கக்கண்டு
உனக்குள்ளேயே நீ
உவகை கொள்கையில்
எனக்குள் பெருகிடும்
எல்லையில்லா இன்பம்
கல்லில் கூட கண்டான்
கடவுளை மனிதன்
எச்செயலும் எப்பொருளும்
எனக்கு உனை காட்டியபோதே
உணர்ந்தேன் அவனது செயலின்
உண்மை அர்த்ததை
வாழ்வின் பல இலக்குகளின்
வழி தெரியாதிருந்தேன் நான்
திக்கொன்றாய் இருந்த அவை
திரண்டனவே உன்னில்
தாய்தந்தையை விட
தாரமே நீ எனக்கு
ஆதாரமே - இது மனக்கணக்கு
காலத்தினருமையை
காட்டுகிறாய் நீ எனக்கு
அஸ்தமனங்கூட ஏற்படலாம்
மத்தியானத்தில் எனக்கு
ஜனனத்தின் சிறப்பும்
சிதைந்துபோம்
பாவையே நீயின்றேல்


No comments: