Thursday, December 10, 2009

இலக்கு வைத்து வாழ்வதால்..



கத்தில் இப்போதெல்லாம்
சிக்கல்கள் பெருகி எனை
பாடாய்ப்படுத்துகின்றன

அகிலம் என் உயிர்
ஸ்தலத்தில் ஏறியதுபோல்
மத்தியிலகப்பட்டு
அவஸ்த்தைப்படுகிறேன் நான்

உனை ஒரு பொழுது பார்க்காவிடினும்
உடைந்து போகிறேன் நான்
சிதறிய சில்லுகளையெல்லாம்
சிக்கல் இன்றி நீ
ஒரு பார்வையால்
ஒட்டிச்செல்வது மீண்டும் சிதைக்கவோ?

ஒருவனாய் இவ்வுலகில்
ஓய்வின்றி ஓடித்திரிகையில்
பிரச்சினைகள் என்றொரு
பிரச்சினை இருக்கவில்லை
இன்றோ
தள்ளிவைக்க எனக்கு
திராணியில்லை என்பதால்
தொண்டையை நெருக்கி
தள்ளிக்கொண்டு நிற்கின்றன
சொல்லிக்கொள்ள முடியாமல்
அல்லல் படுகிறேன் நான்
நாளைய நாள்கூட நினைவின்றி
இன்றைய நாளை வாழ்ந்தேன்
இருபத்தாறு வயதுக்கு
இலக்கு வைத்து வாழ்வதால்
இன்றைய நாளைக்கூட
இழந்து நிற்கின்றேன்

No comments: