Saturday, February 13, 2010

இடரின்றி வென்றிடுவேன்


கற்பனை உலகில்
கட்டற்று பறக்கிறது மனம்
காரணம் இதற்கு
காதலியே நீதான்

பார்வை ஒன்றே
பாருள்ளவரை போதுமென்றிருந்தேன்
சிறு வார்த்தைகள் பேசிப்பேசி
சித்துப்பிடிக்கச்செய்தாய்
விடைபெறும்போது நீ
விடுத்த சைகியில் என்னிடமிருந்து
விடைபெற்றது இதயம்

இனிமேல் நீ
வெட்கப்படவேண்டாம் ஏனெனில்
வெளுத்துப்போகின்றது உன்சாயம்
தலைசரித்து நீ சிரித்தபோது
தன்னிலை மறந்தேன் நான்
குறிப்பறிந்து நீ
குறியிசையால் அழைத்தபோது
உளறிக்கொட்டி
உவகைப்படுகிறேன் நான்
வாழ்வதற்காய் நீ
வாழ்த்துகையில்
அக்கணமே ஆகிறேன்
அகிலத்தினதிபதியாய்
ஊட்டிவிடுமாறு நான்
உனைக்கோரியபோதும்
என்னுடைய அவளிடம்
எடுத்தியம்பக்கூறி
உனது உளமனதுணர்வுகளை
ஊசியின்றி இரத்தத்தில் கலந்தாய்
அவள் யாரென்பதை
அறியாயா நீ எனக்கேட்க
அழகு முகம் காட்டிற்று
அற்வாய் நீ என்பதையும்
அதை நான் உரைக்க
காத்திருக்கிறாய் நீ என்பதையும்
காட்டினேன் சைகையால் ஆயினும்
வாய்திறந்து சொல்ல
வார்த்தைகள் வெளிவரவில்லை
தொக்கி நின்ற வார்த்தைகளில்
தொல்லைகளின்றி உனைக்காக்க
தேவையானதையெல்லாம் நான்
தேடிக்கொள்ளவில்லை என்பது
பொதிந்திருததை அறிவாயோ நீ?
உன்னுடையவன் நான் என்பதை
உணர்த்தவா ஊட்டினாய்
உடலுக்கு பலம் சேர்க்கும்
உணவு அன்று என்
உணர்வுகட்கு
பலமூட்டியதால்
இனிவரும் நாட்களை
இடரின்றி வென்றிடுவேன்