Wednesday, December 9, 2009

அறிமுகம்


தோற்றுப்போன காதல் அது. அது என் முதற்காதலும் கூட. காதல் என்னவோ ரொம்பத்தான் பிந்திவந்தது எனக்கு. அது ஓராண்டு கூட பிறர் கண்ணுக்கு வாழாவிடினும் எனக்குள் இன்றுவரை ஆண்டுகள் எட்டு கடந்தும் வாழ்கின்றது.

எட்டு  ஆண்டுகளுக்கு முன் தொடர்பாடல் வசதி பற்றி சொல்லவேண்டியதில்லை. அக்காலப்பகுதியில் ஒரு மாணவனாக இருந்த எனக்கு அன்றிருந்த தொடர்பாடல் எதுவும் வசதிக்கு பொருந்தவில்லை. 

எட்டு ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன என் காதலியின் படங்கள்; குடும்பப்படங்களாக இணையத்தில் காணநேர்ந்த கொடூரமும் எனக்கு நடந்தது. தொடர்பாடல் வசதிகளை வாழ்த்துவதா நோவதா என்றுகூட எனக்கு தெரியவில்லை.

என்காத்லின் ஆரம்பத்தில் இருந்து கவிதை எழுதவேண்டும் என்பதற்காகவன்றி சில சமயங்களில் என்க்கு கவிதை போல் தோன்றியவைகளை குறிப்பெடுத்து பாதுகாத்திருந்தேன்.

இனிமேல் அதை பாதுகாக்கும் நோக்கமில்லை என்பதால், என்க்குள் இருக்கும் காதலுக்காக அன்றெழுதிய கவிதைகளை கொண்டே தாஜ்மஹாலாய் வடிக்கிறேன். ஏழை என்னால் அதுதான் முடியும்.

மொத்த கவிதைகளையும் ஒன்றாய் வலைப்பூவிலேற்றினால் உங்களுக்கு வாசிக்க நேரமும் இருக்காது. எனவே எல்லாவற்றையும் துண்டுகளாக்கி ஒவ்வொருநாளும் தானாக மலர்ச்செய்துள்ளேன். ஒரு நிமிடம் வீதம் ஒரு நாளைக்கு என்க்கொதுக்கி என் தாஜ்மஹாலை சிதிலமடையாமல் பாதுகாப்பதற்கும் உங்களையே நம்பியுள்ளேன்.

நண்பர்களே, இணையம் இருக்கும் காலமெல்லாம் என் காதலின் சுவடும் ஒரு தாஜ்மஹாலாய் வாழும்தானே?


No comments: